ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார். இவர் அடுத்தபடியாக மீண்டும் ரஜினியை வைத்து ஜெயிலர்-2 படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அதன்பிறகு ஜெயிலர்-2 படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை முடித்ததும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார் நெல்சன். ஜூனியர் என்டிஆரிடத்தில் கதை சொல்லி ஓகே செய்துவிட்ட அவர், அப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.