ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் சூர்யா நடிப்பில் இயக்கிய ‛சூரரைபோற்று' படத்தை ஹிந்தியில் ‛சர்பிரா' என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்தார் சுதா கொங்கரா. அதன்பிறகு சூர்யா நடிப்பில் ‛புறநானூறு' படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க சென்று விட்டதால் அந்த கதையை சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி ஓகே பண்ணி இருந்தார் சுதா. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக ஒரு நெகட்டீவ் ரோலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். ஆனால் அவர் படம் இயக்குவதில் பிசியாக இருப்பதாக மறுத்து விடவே அதன் பிறகு அந்த வேடத்தில் அதர்வா நடிப்பதாக கூறப்பட்டது.
இப்போது அமரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு புறநானூறு பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டு வரும் சுதா, அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோதும் வில்லனாக ஒரு முன்னணி ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் . அதற்காக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதோடு இந்த புறநானூறு படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்குகிறார் சுதா கொங்கரா.