கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' |
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா கேரளாவை சேர்ந்த கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவர். இயற்பெயர் தினா மரியம் குரியன். சினிமாவுக்காக நயன்தாரா ஆனார். இந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இருந்தாலும் அடிப்படையில் கிறிஸ்தவ பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தனது கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“அன்பிலும் பிரார்த்தனைகளிலும் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கடவுளை நம்புங்கள். அது உங்களை வாழ வைக்கும் மிகப்பெரிய சக்தி” என்று பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் நேற்று வைரலாக பரவியது.