படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகிறது. இந்த தொடரின் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐதராபாத் அணியின் உரிமையாளராக நடிகர் ராம் சரணும், மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சனும், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய் குமாரும், பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஐஎஸ்பிஎல் டி-10 தொடரில் எங்களது சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா. அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.