மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் அறிவிப்பு கடந்த மே 1ம் தேதி வெளியிடப்பட்டு, அக்டோபர் 4ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த நீரவ்ஷா படத்திலிருந்து வெளியேறி ஓம் பிரகாஷ் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக, அஜித்துக்கும், மகிழ் திருமேனிக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
என்றாலும் அவற்றை தள்ளி வைத்துவிட்டு படப்பிடிப்பை துரிதமாக நடத்தி வருகிறார்களாம். அதோடு, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. பிப்ரவரி மாதம் வரை அஜித்குமார் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் மீதமுள்ள காட்சிகளை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் படமாக்கி முடித்து விட வேண்டும் என்பதால் முன்பை விட தற்போது இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளாராம் மகிழ்திருமேனி.