ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ஷெரின் காஞ்ச்வாலா. மாடலிங் துறையில் நுழைந்து, விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமா நடிகை ஆனார். சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் பிறகு சிபிராஜூடன் வால்டர், சந்தானத்துடன் டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷெரின் காஞ்ச்வாலாவிற்கு அசார்முன் என்ற தொழிலதிபருடன் சத்தமின்றி கடந்த 5ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை அவர் இப்போதுதான் தெரியப்படுத்தி உள்ளார். நிச்சயதார்த்த படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர் “என்றென்றும் என்னவன்” எனக் கூறியுள்ளார்.
திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் ஷெரின் காஞ்ச்வாலா.