ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகில் மிகக்குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டவர் இளம் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி உள்ள குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த நிலையில் இவரது பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இவரை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வந்தன. அதில் பெரும்பாலானவை ஆன்லைன் சூதாட்டங்கள் மற்றும் ஆல்கஹால் சம்பந்தப்பட்ட பொருட்களை முன்னிலைப்படுத்தும் விளம்பரங்கள் தான்..
ஆனால் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ள ஸ்ரீ லீலா இந்த விளம்பரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் சம்பளம் தருவதாக சொல்லப்பட்டும் கூட இவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். சில முன்னணி நடிகர்கள் இதுபோன்ற விளம்பரங்களின் நடித்துவிட்டு மக்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தாங்கள் நடித்த விளம்பரங்களுக்கு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு சமாளிப்பதையும் சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஸ்ரீ லீலாவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கூறி உள்ளனர்.