துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழகத்தை சேர்ந்த பிரபல பக்தி பாடகர் வீரமணிதாசன். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 6 ஆயிரம் பக்தி பாடல்கள் பாடி உள்ளார். பல திரைப்படங்களில் பக்தி பாடல்களை பாடி உள்ளார். இசை கலைஞர்களுக்கு கேரள அரசு வழங்கும் உயரிய விருது 'ஹரிவராசனம்' விருது. சபரிமலை அறங்காவல் அமைப்பும், கேரள அரசும் இணைந்து இந்த விருதை வழங்கி வருகிறது. இதற்கு முன்பு கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இந்த விருதை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இந்த விருது வீரமணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருதை மாநில அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.