ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராதிகா ஆப்தே மும்பை விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ள சென்றபோது நடைபாதை மேம்பாலத்தில் என்ன ஏது என்று காரணம் சொல்லப்படாமலேயே இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பல பயணிகளுடன் சேர்ந்து அடைத்து வைக்கப்பட்டதாக கூறி தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நடிகர் டிரம்ஸ் சிவமணிக்கும் சமீபத்தில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு காத்திருப்பு நிகழ்வு ஏற்பட்டது. ஆனால் அதை அவர் எதிர்கொண்ட விதம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி உள்ளது.
சமீபத்தில் கொச்சிக்கு விமானப்பயணம் மேற்கொண்ட டிரம்ஸ் சிவமணி விமான நிலையத்தில் இறங்கி கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை தனது லக்கேஜ்களை பெறுவதற்காக காத்திருந்தார். அவருடன் பயணித்த சக பயணிகள் பலரும் இதேபோல காத்திருந்து, ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆனார்கள். ஆனால் டிரம்ஸ் சிவமணி அவர்களை மட்டுமல்ல தன்னையும் கூட டென்ஷனை குறைத்து கூல் செய்யும் விதமாக எஸ்கலேட்டரின் அருகில் உள்ள கைப்பிடி சுவரில் குச்சிகளை வைத்து ஏ.ஆர் ரஹ்மானின் ஹம்மா ஹம்மா என்கிற பாடலுக்கு ஏற்றபடி இசையமைக்க ஆரம்பித்து விட்டார்.
அங்கிருந்த சக பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “40 நிமிட காத்திருப்பு காரணமாக நாங்கள் எல்லோரும் போராட்டம் தான் நடத்தி இருக்க வேண்டும். மாறாக எங்கள் அனைவரையும் பொழுதுபோக்கும் மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார் சக பயணி ஒருவர்” என்றும் டிரம்ஸ் சிவமணி குறித்து கூறியுள்ளார்.