பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்று அதன் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்து அங்கும் முன்னணி நடிகையாக மாறி உள்ளார். ரன்பீர் கபீருடன் அவர் இணைந்து நடித்த அனிமல் படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இந்தபட வெளியீட்டுக்கு முன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா போன்றே மார்பிங் செய்து உருவாக்கப்பட்ட ஒரு ஆபாச வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு திரையில் இருந்து அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோ வெளியானது. இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்கும் விதமாக விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட முக்கிய நபரை கைது செய்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.