உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜூனா நடிக்கின்றார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வேங்கை, குட்டி ஆகிய படங்கள் வெளியாகி பாடல்கள் வெற்றி பெற்றன. தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.