விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
‛‛ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது சந்தோஷமாக உள்ளது. என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு'' என்றார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத அரசியல் நிகழ்வா என்ற கேள்விக்கு.... ‛‛ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்து அவர்களின் சொந்த கருத்து. நான் இதை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்'' என்றார்.