தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகின் சக இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான்
மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் உங்களுடன் இருக்கிறது.
அனிருத்
அதிர்ச்சியும் சோகமும்… குடும்பத்தாருக்கும், நண்பர்களும் இதயப்பூர்மான இரங்கல்.
தமன்
இது அதிர்ச்சியானது. இளையராஜா சார் குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கட்டும். அன்பான பவதாரிணி சீக்கிரமே மறைந்துவிட்டீர்கள். இதயம் கடினமாக உள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
இமான்
பவதாரிணி மேடம் திடீர் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். சீக்கிரமே மறைந்துவிட்டார். அவரது ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்.
சந்தோஷ் நாராயணன்
மிகவும் சோகமான இழப்பு. மிகவும் திறமையும், மென்மையாகவும் பேசக் கூடிய பவதாரிணி மேடம் பல நினைவுகளை நமக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். ராஜா சார் மற்றும் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும், அனுதாபங்களும்.
ஜஸ்டின் பிரபாகரன்
செய்தி பற்றி கேள்விப்பட்டதும் ஆழ்ந்த துயரமாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.