பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளரும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகின் சக இசையமைப்பாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான்
மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா.. இந்த துயரமான நேரத்தில் எங்கள் இதயம் உங்களுடன் இருக்கிறது.
அனிருத்
அதிர்ச்சியும் சோகமும்… குடும்பத்தாருக்கும், நண்பர்களும் இதயப்பூர்மான இரங்கல்.
தமன்
இது அதிர்ச்சியானது. இளையராஜா சார் குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கட்டும். அன்பான பவதாரிணி சீக்கிரமே மறைந்துவிட்டீர்கள். இதயம் கடினமாக உள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.
இமான்
பவதாரிணி மேடம் திடீர் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். சீக்கிரமே மறைந்துவிட்டார். அவரது ஆன்மா அமைதி பெறட்டும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்.
சந்தோஷ் நாராயணன்
மிகவும் சோகமான இழப்பு. மிகவும் திறமையும், மென்மையாகவும் பேசக் கூடிய பவதாரிணி மேடம் பல நினைவுகளை நமக்கு பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். ராஜா சார் மற்றும் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும், அனுதாபங்களும்.
ஜஸ்டின் பிரபாகரன்
செய்தி பற்றி கேள்விப்பட்டதும் ஆழ்ந்த துயரமாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.