தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள்.
கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அது திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை.
நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன்பாபு, அவரது மனைவியுடன் இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். “அதிர்ச்சியாக இருந்தது. இதயம் உடைந்த தகவலைக் கேட்டபின் இளையராஜா அவர்களை சந்தித்து அவரது மகள் பவதாரிணி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தாருக்கு கடவுள் சக்தியைக் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.