400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? | 500 கோடி வசூலைக் கடந்த 'சாயாரா' | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‛விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளார்கள். இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் பங்கேற்றனர்.
இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.தாணு. தமிழ் சினிமா தற்போது உலக அரங்கை நோக்கி சென்று கொண்டிருப்பது இந்த கைதட்டல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூரி வெளியிட்ட பதிவில் ‛‛நெதர்லாந்த், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது...'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.