ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
லோக்சபா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அம்மாதத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சில பல புதிய படங்கள் வெளியாகும். அதோடு பள்ளிப் படிப்பிற்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையும் ஆரம்பமாகும். எனவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆறு வாரங்களுக்கு பல புதிய படங்கள் வெளியாகும்.
இந்நிலையில் அந்த சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பரபரப்புக்கிடையில் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படங்களைப் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். சினிமா போஸ்டர்கள் ஒட்ட இடம் கிடைக்காது. தேர்தல் பிரசாரங்களால் ஒவ்வொரு ஊருமே போக்குவரத்து நெரிசல், பரபரப்பு என இருக்கும். வெயிலின் தாக்கமும் இந்த வருடம் அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானால் அதற்கான கொண்டாட்டங்கள் வேறு இருக்கும்.
இத்தனை காரணங்களால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாவதாக சொல்லப்பட்ட படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போக வாய்ப்புகள் உள்ளது.