ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‛கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அரசியலில் குதித்துள்ள விஜய், தனது கட்சிக்கு ‛தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளார். எந்தவித பத்திரிகையாளர் சந்திப்போ, பொதுக்கூட்டமோ இல்லாமல் அரசியலில் நுழைந்ததை வெளிப்படுத்திய விஜய், கோட் படத்தை அடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அரசியலில் நுழைந்த பிறகு முதன்முறையாக ரசிகர்களை சந்தித்த விஜய்க்கு, ரசிகர்கள் மாலை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட விஜய், கழுத்தில் அணிவித்தும், செல்பி எடுத்தும் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.