நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மலையாள நடிகையான நஸ்ரியா தமிழில் நேரம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் இப்போது மீண்டும் நடித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ஒரு புதிய வெப் தொடரில் நஸ்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கும் இந்த வெப் தொடரை சூர்யா பிரதாப் இயக்குகிறார். சென்னையில் நடந்த கொலை குறித்து உருவாகியுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இப்போது இதன் மொத்த படப்பிடிப்பை 100 நாட்களில் நஸ்ரியா நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.