பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொடி, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். தற்போது சூரி, சரத்குமார், உன்னி முகுந்தனை வைத்து ‛கருடன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் லெஜெண்ட் படத்தை அடுத்து சரவணன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. தனது புதிய படம் விரைவில் ஆரம்பமாகும் என்று சோசியல் மீடியாவில் சரவணன் செய்தி வெளியிட்ட போதும், அந்த படத்தை இயக்கப் போவது துரை செந்தில்குமார் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
தற்போது சரவணன் படம் பற்றி துரை செந்தில் குமார் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சரவணனுக்கு நான் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு பிடித்து விட்டதால் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறினார். அப்போது அந்த படம் குறித்து நான் ஒரு புதிய ஐடியாவை சொன்னேன். அந்த ஐடியாவும் அவருக்கு பிடித்ததை அடுத்து அது குறித்த சில வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்று தெரிவித்து இருக்கிறார்.