தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் விஷால் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது சுயேட்சையாக போட்டியிட களம் இறங்கினார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவரால் போட்டியிட முடியவில்லை. விரைவில் அரசியல் கட்சி தொடங்க போவதாக செய்தி வந்தது. ‛‛காலம் தான் முடிவு செய்யும். தேவைப்பட்டால் மக்களுக்காக குரல் கொடுப்பேன்'' என அறிக்கை வெளியிட்டார் விஷால்.
இந்த நிலையில் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கூறுகையில், விஷாலுக்கு சிறிய வயதில் இருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டு. தன்னிடத்தில் பணம் இல்லை என்ற போதும் கடன் வாங்கியாவது மற்றவர்களுக்கு உதவி செய்வார். தற்போது தனது தாயார் தேவியின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவி செய்கிறார். தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்தில் உள்ளார். கண்டிப்பாக விஷால் அரசியலுக்கு வருவார். அரசியலில் ஜெயித்து காட்டுவார். அதேசமயம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய், அஜித், சூர்யா போன்று நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும். அதன்பிறகு, தான் சம்பாதித்த பணத்தை வைத்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான் எனது ஆசை'' என்றார்.