சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பெங்களூரு: 'இம்முறை லோக்சபா தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்' என நடிகர் யஷ் கூறியிருப்பது, எம்.பி., சுமலதா அம்பரிஷுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷ் சுயேட்சையாக களமிறங்கினார். ஸ்டார் நடிகர்கள் தர்ஷன், யஷ் உட்பட பலர் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தரும் வாய்ப்புள்ளது. தொகுதியில் தானே களமிறங்குவதாக சுமலதா பிடிவாதமாக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தொகுதியை விட்டுத்தரும்படி கோரியுள்ளார்.
இன்னும் மாண்டியா தொகுதி இழுபறியில் உள்ளது. இம்முறை பா.ஜ., சார்பிலோ அல்லது சுயேச்சையாக சுமலதா போட்டியிட்டால், நடிகர்கள் பிரசாரம் செய்வரா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக நடிகர் யஷ் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.
இதனால், சுமலதா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.