ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
பெங்களூரு: 'இம்முறை லோக்சபா தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்' என நடிகர் யஷ் கூறியிருப்பது, எம்.பி., சுமலதா அம்பரிஷுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷ் சுயேட்சையாக களமிறங்கினார். ஸ்டார் நடிகர்கள் தர்ஷன், யஷ் உட்பட பலர் சுமலதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், மாண்டியா தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தரும் வாய்ப்புள்ளது. தொகுதியில் தானே களமிறங்குவதாக சுமலதா பிடிவாதமாக இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். தொகுதியை விட்டுத்தரும்படி கோரியுள்ளார்.
இன்னும் மாண்டியா தொகுதி இழுபறியில் உள்ளது. இம்முறை பா.ஜ., சார்பிலோ அல்லது சுயேச்சையாக சுமலதா போட்டியிட்டால், நடிகர்கள் பிரசாரம் செய்வரா என்ற கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக நடிகர் யஷ் கூறுகையில், ''லோக்சபா தேர்தலில், நான் எந்த வேட்பாளரையும் ஆதரித்து, பிரசாரத்துக்கு செல்லமாட்டேன். என் குறிக்கோள் சினிமா மட்டுமே. அரசியல் எங்களுக்கு தேவையில்லை,'' என்றார்.
இதனால், சுமலதா தரப்பு அதிர்ச்சியில் உள்ளது.