ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
''சீதா ராமம், ஹை நான்னா” தெலுங்குப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மிருணாள் தாகூர். தமிழில் சில படங்களில் அவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மிருணாள் தற்போது மும்பையில் இரண்டு குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இரண்டு அபார்ட்மென்ட் குடியிருப்புகளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் குடும்பத்தினருக்கு சொந்தமானதாம். கங்கனாவின் அப்பா, சகோதரருக்குச் சொந்தமான அந்த குடியிருப்புகளை மிருணாளும், அவரது அப்பா பெயரிலும் வாங்கியிருக்கிறார்கள்.
மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள அந்த இரண்டு குடியிருப்புகளின் விலை 10 கோடி என்கிறார்கள். அதே குடியிருப்பில் தற்போது மிருணாள் வசித்து வருவதால் மிருணாள் எளிதில் பேச்சுவார்த்தை நடத்தி வாங்கியிருக்கிறார்கள். அந்த பழைய குடியிருப்பை புதுப்பிக்கும் வேலைகளில் மிருணாள் குடும்பத்தினர் இறங்கியிருக்கிறார்கள்.
மிருணாள் தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக 'பேமிலி ஸ்டார்' படத்தில் நடித்து வருகிறார்.