தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
'96' பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்கின்றார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இதன் படப்பிடிப்பு வேலூர் பகுதியில் நடைபெற்றுறது. நேற்றுடன் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. மேலும், இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதில் கார்த்தி அல்லாத மற்ற நடிகர், நடிகைகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இந்த படத்திற்கு மெய்யழகன் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.