தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
2024ம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது. மார்ச் மாதம் வந்தாலே புதிய படங்களின் வருகை குறைந்துவிடும். பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகிவிடும். இருப்பினும் வரும் மார்ச் 1ம் தேதி “அதோ முகம், ஜோஷ்வா, மங்கை, போர், சத்தமின்றி முத்தம் தா, தோழர் சேகுவேரா” ஆகிய படங்கள் வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 'மங்கை' படம் வருமா என்பது சந்தேகம்தான். அப்படத்தைத் தயாரித்த திமுக பிரமுகரான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளதால் அப்படம் வெளிவருவது சந்தேகமே.
சத்யராஜ் நடித்துள்ள 'தோழர் சேகுவேரா' என்ற படமும் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அதனால், 'அதோ முகம், ஜோஷ்வா, போர், சத்தமின்றி முத்தம் தா' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் நிலை என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.