தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
2024ம் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் இன்னும் இரண்டு நாட்களில் முடியப் போகிறது. மார்ச் மாதம் வந்தாலே புதிய படங்களின் வருகை குறைந்துவிடும். பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகிவிடும். இருப்பினும் வரும் மார்ச் 1ம் தேதி “அதோ முகம், ஜோஷ்வா, மங்கை, போர், சத்தமின்றி முத்தம் தா, தோழர் சேகுவேரா” ஆகிய படங்கள் வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 'மங்கை' படம் வருமா என்பது சந்தேகம்தான். அப்படத்தைத் தயாரித்த திமுக பிரமுகரான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தலைமறைவாகியுள்ளதால் அப்படம் வெளிவருவது சந்தேகமே.
சத்யராஜ் நடித்துள்ள 'தோழர் சேகுவேரா' என்ற படமும் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
அதனால், 'அதோ முகம், ஜோஷ்வா, போர், சத்தமின்றி முத்தம் தா' ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த வாரம் வெளியான படங்களுக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் நிலை என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.