தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்டுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், அவர்களது திருமணம் வருகிற ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த நிலையில் அவர்களது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டு, இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில், பாலிவுட் சினிமாவை சேர்ந்த ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் பங்கேற்ற நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் தனது மனைவி, மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.