பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் இயக்க உள்ள 'தென் மாவட்டம்' என்ற புதிய படத்தின் முதல் பார்வையை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில் இசை - யுவன்ஷங்கர் ராஜா என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இப்படத்திற்காக தன்னை யாரும் அணுகவில்லை, தான் ஒப்பந்தமாகவில்லை என யுவன் சமூக வலைத்தளத்தில் விளக்கம் சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆர்கே சுரேஷ் உங்களது ஒப்பந்தத்தைப் பாருங்கள் எனக் கூறியிருந்தார்.
இது என்ன புது சர்ச்சை என ரசிகர்களும், திரையுலகினரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இந்நிலையில், “தென் மாவட்டம்' படத்தின் புதிய இசை அமைப்பாளர் விரைவில் அறிவிக்கப்படும, நன்றி யுவன்,” என ஆர்கே சுரேஷ் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இரு தரப்பிலும் பேசி சுமூக முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.