ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாகவே ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் சர்ச்சை எழுந்து வந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படம் ஹிட் அடித்ததை அடுத்து அந்த சர்ச்சை ஓய்ந்திருந்தது. அதையடுத்து லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான். அவர் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று பேசி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதேபோல் லால் சலாம் படத்தின் ஆடியோ விழாவில், எனக்கு விஜய் போட்டி அல்ல என்று ரஜினிகாந்த்தும் ஒரு கருத்து சொன்னதை அடுத்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வந்த ரஜினி - விஜய் ரசிகர்கள் அமைதி அடைந்தார்கள்.
இந்தநேரத்தில் தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன் படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு விஜய்யின் ‛கோட்' படமும் ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரப்போவதாக இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மீண்டும் சோசியல் மீடியாவில் ரஜினி - விஜய் ரசிகர்களுக்கிடையே வார்த்தை மோதல் உருவாகி சலசலப்பு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.