ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த பிரபல பிசினஸ்மேன் டாக்டர் எ.வேலுமணி. தைராய்டு பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நடிகர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர். சில தினங்களுக்கு முன்பு தனது நீண்ட கால நண்பர் சிவகுமாரை சந்தித்தது பற்றிய பதிவுகளைப் போட்டிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியது குறித்த பதிவொன்றை இன்று பதிவிட்டுள்ளார். அந்த சந்திப்பில் நடிகர் சிவகுமாரும் உடனிருந்துள்ளார். “கனவு நனவானது… 50 வருடக் காத்திருப்பு. என்னைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தது மகிழ்ச்சி. எனது கதை, எனது பயணம், 40 முழு நிமிடங்கள் கொடுத்தார். சூப்பர்ஸ்டார் எனது 'பன்ச்லைன்'களைப் பேசியதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. குளிர்ச்சியான சிரிப்பு, தூய்மையான கவனம். அவரை சந்தித்த போது, 'தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்,' என்றார். வாவ்..என்ன ஒரு பயணம், என்ன ஒரு மனிதத் தன்மை, அவர் ஒருவர் மட்டுமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.