'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நடிகர் யோகிபாபு ஒரு பக்கம் பெரிய நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும் இன்னொரு பக்கம் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'சன்னிதானம் PO'. தமிழ் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னடத்திலும் உருவாகும் இந்த படம் சபரிமலையை பின்னணியாக கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை அமுதா சாரதி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கன்னட நடிகரான ரூபேஷ் ஷெட்டி என்பவரும் நடித்து வருகிறார். இதன் மூலம் முதன்முறையாக தமிழிலும் அறிமுகமாகிறார் ரூபேஷ் ஷெட்டி. யோகிபாபுவுடன் நடிப்பது குறித்த தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டுள்ள ரூபேஷ் ஷெட்டி கூறும்போது, “தமிழ் சூப்பர் ஸ்டார் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் தமிழில் எனது முதல் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.