இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த நான்கு வருடங்களாகத் தயாரிப்பில் உள்ள இப்படம் எப்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என ராம் சரண் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கி வருகிறார் என்பதே இத் தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள்.
இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமை சுமார் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுவும் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமை மட்டும்தானாம். ஹிந்தி உரிமையையும் சேர்த்தால் அது 150 கோடியைத் தொடும் என்கிறார்கள். மேலும், படத்தின் சாட்டிலைட் உரிமைகளையும் சேர்த்தால் படத்திற்காகப் போட்ட பட்ஜெட்டை இவற்றிலேயே மீட்டுவிடுவார்களாம்.
தியேட்டர் வியாபாரம், அதற்கான வசூல் மற்றவர்களுக்கான வருமானம். ஓடிடி, சாட்டிலைட்டில் மட்டுமே போட்ட முதலீட்டை 'டேபிள் பிராபிட்' ஆக எடுத்து விடுவதால்தான் இத்தனை வருட தாமதத்திற்கும் தயாரிப்பாளர் தில் ராஜு வருத்தப்படவேயில்லை என்கிறார்கள்.