தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
2012ம் ஆண்டில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் 'சகுனி'. இதனை சங்கர் தயாள் என்பவர் இயக்கினார். பெரும் எதிர்பார்பில் வெளிவந்த இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஷங்கர் தயாள் புதிய படம் ஒன்றைக் இயக்கியுள்ளார். நடிகர் செந்தில், நடிகர் யோகி பாபு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
ஷங்கர் தயாள் கூறுகையில், “குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அரசியல் படம். சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறேன். குழந்தைகளுக்கு அரசியலையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் மூலமாக ஒரு முக்கியமான கருத்தையும் சொல்கிறோம். யாரையும் காயப்படுத்தாத ஜாலியான படமாக இருக்கும்” என்றார்.