'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அதேபோல வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா பற்றியும் படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் அடுத்த கட்ட தலைவர்கள் பற்றிய படம் தயாராகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழினி ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து 'செஞ்சமர்' என்ற படம் தயாராகிறது. இதில் ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா, சாக்ஷி அகர்வால், மைம் கோபி, ரஞ்சன், கீர்த்தனா, விஷ்வா, சதீஷ், சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர். சி.ஜி.எம்.பிக்சர்ஸ் சார்பில் மணிவண்ணன் தயாரிக்கிறார்.
அதிரை தமீம் அன்சாரி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது ''இலங்கையில் இறுதிப்போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் என்ன ஆனார்கள்? திரும்பி வருவார்களா? என்ற ஆய்வை செய்ய இலங்கைக்கு ஐ.நா. போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு படம் தொடங்குகிறது. குறிப்பாக பிரிகேடியர் பால்ராஜ், தமிழினி பற்றியும் படம் பேசுகிறது.
இறுதி போருக்கு முன்னால் தமிழ் மக்கள் மற்றும் விடுதலை போராளிகளின் வாழ்வியல் எப்படி இருந்தது? என்பதையும் படம் அலசும். இந்த படம் இலங்கை தமிழர் வாழ்வுரிமை போராட்டத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்'' என்றார்.