'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? |
இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் 'கேம் சேன்ஞ்சர்', தமிழில் 'இந்தியன் 2' என்ற இரு படங்களிலும் பிசியாக இருக்கிறார். இரண்டுமே 300 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ஷங்கர் அதற்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வந்தார். அற்போது அந்த பணிகளுக்கு சின்ன கேப் விட்டு மகளின் திருமணத்தில் பிசியாகி விட்டார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள்; இளைய மகள் அதிதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர் ரோகித் என்பருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரோகித் போக்சோ வழக்கில் சிக்கியதால் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா.
தற்போது ஐஸ்வர்யாவை தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திக் என்பவருக்கு மணமுடித்து கொடுக்கிறார் ஷங்கர். தற்போது இந்த திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கு ஷங்கர் தனது மனைவியுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். இந்த திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.