தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ‛லவ்டுடே' படம் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் என்பவர் இயக்குகிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறதாம்.