ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகர் மன்சூரலிகான் இந்த லோக்சபா தேர்தலிலும் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாகவே அவர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில், வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதி கிராமங்களில் இன்று காலை பிரச்சாரம் செய்திருக்கிறார் மன்சூரலிகான். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரது கட்சியின் தொண்டர்கள் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளார்கள். என்றாலும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலிதானா? இல்லை வேறு பிரச்சனையா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.