இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
நடிகர் பஹத் பாசில் கடந்த இரண்டு வருடங்களாக விக்ரம், புஷ்பா, மாமன்னன், மலையாளத்தில் பாச்சாவும் அற்புத விளக்கும் என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். சமீபத்தில் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த ஆவேசம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஐந்தே நாட்களில் 50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதே சமயம் கடந்த வருடம் அவர் கன்னட இயக்குனரான பவண்குமார் என்பவர் இயக்கத்தில் தூமம் என்கிற படத்தில் நடித்தார் பஹத் பாசில். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வியை தழுவியது. இது குறித்த காரணத்தை தற்போது கூறியுள்ளார் பஹத் பாசில்
“அந்த படம் புகை பிடித்தலுக்கு எதிரான ஒரு செய்தியை சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு புகையிலை கம்பெனியில் வேலை பார்க்கும் ஊழியர் கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். இன்றைய இளைஞர்கள் புகை பிடிக்கும் தவறான பாதைக்கு செல்லக்கூடாது என என் கதாபாத்திரம் மூலமாக அதில் வலியுறுத்தப்பட்டது. அதே சமயம் நான் புகைபிடிப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நான் புகை பிடிக்கக் கூடாது என அட்வைஸ் செய்வதை ரசிகர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
சில படங்களை எடுப்பதற்கு முன் கதையாக பார்க்கும் போது மிகப் பிரமிப்பாக இருக்கும். படமாக எடுத்தே ஆக வேண்டும் என தோன்றும். ஆனால் படமாக எடுக்கும்போது நாம் எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தூமம் அப்படி ஒரு படம் தான்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.
இவர் இந்த படத்தில் நடித்த போதே இது அவர் ஏற்கனவே தமிழில் நடித்த வேலைக்காரன் படத்தின் சாயலில் தான் உருவாகிறது என்று சொல்லப்பட்டதும், அந்த படத்திற்கு கிடைத்த அதே ரிசல்ட் தான் இதற்கும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.