தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரையுலகில் கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் பாலியல் ரீதியாக பிரச்னைகளை சந்தித்ததாக நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். ஆனால் பின்னர் இது குறித்த விசாரணையில் இவை அனைத்தும் கிட்டத்தட்ட போலியான குற்றச்சாட்டுகள் என்றும் ஆதாரமற்றவை என்றும் பல வழக்குகளில் நிரூபணம் ஆகின. அப்படித்தான் நடிகை மினு முனீர் என்பவர் பிரபல மலையாள இயக்குனரும் நடிகருமான பாலச்சந்திரன் மேனன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். காவல்துறையில் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலச்சந்திர மேனன் மீது வழக்கு பதியப்பட்டது.
அதேசமயம் நடிகை மினு முனீரும் அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திரன் மேனனும் போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது வக்கீலான சங்கீத் லூயிஸ் என்பவரும் திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.