ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிருவித்ராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' மலையாளப் படம் இந்த வாரம் மார்ச் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து தரும் பணிகளை ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்து வருகிறதாம்.
அதன் காரணமாக அதேநாளில் விக்ரம் நடித்துள்ள தமிழ்ப் படமான 'வீர தீர சூரன் 2' படத்திற்குக் கிடைக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம். இத்தனைக்கும் தமிழகத்தில் 'எல் 2 எம்புரான்' படத்திற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை.
கேரளாவில் 'எல் 2 எம்புரான்' படத்திற்குத்தான் முன்னுரிமை, அது எங்கள் மலையாளப் படம் என அங்குள்ள தியேட்டர்காரர்கள் சொல்கிறார்களாம். அதனால், அங்கு 'வீர தீர சூரன் 2' குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகிறது. ஆனால், அது போல ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்ப் படத்திற்குத்தான் முன்னுரிமை என சொல்லவில்லை.
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, தமிழ், தமிழ், என பேசிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் மலையாளப் படத்திற்கு இப்படி முன்னுரிமை தருவது சரியா என தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இத்தனைக்கும் முதல்வர் குடும்பத்திற்கு விக்ரமும் ஒரு விதத்தில் உறவினர் தான்.
இதனால், 'வீர தீர சூரன்' குழுவினர் அமைச்சர் உதயநிதியிடம் இது குறித்த முறையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.