தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

திரைப்படத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, இந்த ஆண்டு மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. டில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் விருது பெறுவதற்காக டில்லி புறப்பட்டபோது நேற்று கொச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் மோகன்லால் கூறியதாவது: தாதா சாகேப் பால்கே விருது எனக்கு அறிவித்து இருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனது 48 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில், எனக்கு கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன்.
பல சாதனையாளர்கள் நடந்து சென்ற வழியில், நானும் தொடர்ந்து செல்கிறேன். நான் பணிபுரியும் சினிமா தொழில் தான் எனக்கு தெய்வம். அதே தெய்வம் தான் இந்த விருதை வழங்கி உள்ளதாக கருதுகிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு நான் என்றும் மதிப்பளிக்கிறேன்.
தொழிலில் நாம் காட்டும் அக்கறையும், நேர்மையும், திறமையும் மட்டுமே நம்மை உயர செய்யும். இந்த விருது மலையாள திரைப்பட உலகிற்கு கிடைத்ததாக கருதி, மலையாள திரையுலகிற்கு சமர்ப்பிக்கிறேன். அதோடு அனைத்து நடிகர்களுடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எல்லோருடன் இணைந்து நடித்ததால் தான் மோகன்லால் என்ற ஒரு நடிகர் உருவானார். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.