ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

பான் இந்தியா அளவில் வெளியீடு என்றால் அதில் தென்னிந்திய அளவில் தெலுங்குப் படங்கள்தான் முன்னணியில் இருக்கிறது. இந்த வருடம் தமிழிலும் சில பிரம்மாண்டப் படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவற்றை வட இந்தியாவில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு அப்படங்களின் தயாரிப்பாளர்கள் உண்மையாகவே முயற்சிப்பதில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கும் அதே நிலைமைதான்.
ஆனால், தெலுங்கில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா' ஆகிய படங்களுக்குப் பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தி உரிமை விலையில் அதிக வியாபாரத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் 'புஷ்பா 2' படம் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
அடுத்து பிரபாஸ் நடித்து வெளியாக உள்ள 'கல்கி 2898 ஏடி' படம் 100 கோடிக்கும், ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் 75 கோடிக்கும், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள 'தேவரா' படம் 50 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் ரஜினியின் 'வேட்டையன்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', விஜய்யின் 'தி கோட்', அஜித்தின் 'விடாமுயற்சி', சூர்யாவின் 'கங்குவா' ஆகியவை எந்த விலைக்கு போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.