'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அங்கு வில்லன்களுடன் விஜய் மோதும் பைக் சேஸிங் உள்ளிட்ட பல ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛இந்த கோட் படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது. குறிப்பாக பல இந்திய படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தில் இதுவரை இங்கு படமாக்கப்படாத பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் எங்களுடைய ஆடியன்சுக்கு இந்த படத்தின் மூலம் மாஸ்கோவை புதிய கோணத்தில் காண்பிக்கப் போறோம்'' என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.