தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களுக்குள்ளாகவே முன்னணி இளம் நடிகர்களில் முக்கிய நடிகர், அதிலும் பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் பிரபாஸ் ஒரு பக்கம் கல்கி படத்திலும் இன்னொரு பக்கம் இயக்குனர் ராஜா ஸாப் படத்திலும் மாறி மாறி நடிக்க வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 35 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார் பிரபாஸ். சமீபத்தில் நடைபெற்ற இயக்குனர் சங்க கூட்டத்தின்போது இந்த தகவல் அங்கிருந்த நிர்வாகிகள் மூலமாக வெளியாகி உள்ளது. மறைந்த பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவின் பெருமையை கொண்டாடும் விதமாக வரும் மே நான்காம் தேதி வருடாந்திர இயக்குனர் தினத்தன்று ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் ஒரு மிகப்பெரிய கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தான் பிரபாஸ் அளித்த நன்கொடை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.