இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சில வருடங்களுக்கு முன்பு வரை மலையாளத் திரையுலகுடன் தனது நடிப்புத் எல்லையை சுருக்கிக் கொண்டிருந்தார் நடிகர் பஹத் பாசில். கடந்த இரண்டு வருடங்களில் தமிழில் விக்ரம், மாமன்னன், தெலுங்கில் புஷ்பா என மூன்று படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் இன்னொரு பரிமாணத்தையும் காட்டியுள்ளார். அனேகமாக துல்கர் சல்மானை போல வரும் நாட்களில் இவரும் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் ஆடிசனில் தான் கலந்து கொண்டது பற்றி சமீபத்தில் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார் பஹத் பாசில். மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்கும் படத்தின் ஆடிசனில் தான் கலந்து கொள்ள சென்றதாகவும் அங்கே அந்தப்படத்தின் கதை பற்றி எதுவும் சொல்லப்படாமல் நடிக்கும் காட்சிக்கான விளக்கமும் எதுவும் சொல்லப்படாமல் ஒரு காட்சியை நடித்துக் காட்டும்படி கூறினார்களாம். பஹத் பாசிலும் அந்த காட்சியை உள்வாங்கி தனது பாணியில் நடித்துக் காட்டினாராம்.
ஆனால் வேற்று மொழியில் ஒரு முதல் படத்திற்கான ஆடிசனில் கலந்து கொள்வது போல இல்லாமல் அங்கு இருப்பவர்கள் ஆடிசனில் பங்கேற்ற கலைஞர்களை ரொம்பவே ஈசியாக உணருமாறு பார்த்துக் கொண்டார்கள் என்று கூறியுள்ளார் பஹத் பாசில். இத்தனை நாட்கள் இதுபற்றி நான் வெளியே சொன்னதே இல்லை என்றும் கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகி உள்ளாரா அல்லது ஆடிசனோடு அவரது பங்களிப்பு முடிந்து விட்டதா என்பதை பற்றி அவர் எதுவும் கூறவில்லை.