இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, நானே வருவேன் என பல படங்களை இயக்கிய செல்வராகவன், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், ராயன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ஏற்கனவே தான் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். மேலும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவ்வப்போது சில கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் செல்வராகவன், தற்போதும் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛ஐயோ இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே. இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒருபோதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும். இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் செல்வராகவன்.