உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

ஞானவேல் இயக்கத்தில் ‛வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த பட படப்பிடிப்புக்காக சில தினங்களுக்கு முன் மும்பை சென்ற ரஜினி அங்கு அமிதாப் உடன் சில காட்சிகளில் நடித்தார். இருவரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு விமானத்தில் சென்னை திரும்பினார் ரஜினி.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛வேட்டையன் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கூலி டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காப்புரிமை விவகாரம் இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள பிரச்னை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்'' என்றார்.
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் ரஜினி நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இதில் ரஜினி நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‛தங்கமகன்' படத்தின் டிஸ்கோ பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூலி படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அது தொடர்பான கேள்விக்கு இப்படி பதில் கூறி உள்ளார் ரஜினி.