டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கவுதமி. சமூக ஆர்வலரும் கூட. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்வாத்தான் கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் நடிகை கவுதமி மூன்று கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அழகப்பனோ பிளசிங் அக்ரோ பார்ம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வாத்தான் கிராமத்தில் உள்ள நிலத்தை 57 லட்ச ரூபாய்க்கு பவர் எழுதி வாங்கியுள்ளார்.
அந்த நிறுவனத்தின் நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாது என்பதால் தன்னிடம் நிலம் வாங்கித் தருவதாக அழகப்பன் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் கவுதமி புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணைக்கு ஆஜராகி விபரங்களை தெரிவித்துள்ளார்.