டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மறைந்த நடிகர் குமரிமுத்து முன்பு அளித்த ஒரு பேட்டியை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‛சில கற்றார் பேச்சும் இனிமையே...' என பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த பேட்டியில், நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார் குமரிமுத்து.
அதில், இந்தப் பாடலில் யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் படித்தவர்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை. சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள் பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, பெரிய சூரியனின் ஒளியில் இருந்து ஒரு சிறு குடை காப்பது போல் என்று அந்த பாடலின் விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக இப்போது இந்த பதிவை போட்டு உள்ளார். இதன் மூலம் யாருக்காவது அவர் பதில் கொடுத்து இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில இளையராஜா, வைரமுத்து ஆகியோரை குறிப்பிட்டுள்ளதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.