ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மறு வெளியீடு செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் சமீபத்திய படங்கள்கூட ரீ ரிலீசுக்கு வருவது டிரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி சிறந்த ஒரிஜினில் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மே 10-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது. 500 கோடியில் உருவான படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் மறுமுறை வெளியிடப்பட உள்ளது. ராஜமவுலியின் பாகுபலி அளவிற்கு வரவேற்பை பெறாத இந்த படம் ஆஸ்கர் விருதை பெற்ற பிறகு மக்களிடம் பார்க்கும் ஆர்வம் வந்திருப்பதால் இதனை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதாக கூறப்படுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ‛நாட்டு நாட்டு' பாடலின் தொழில்நுட்ப தரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.