ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள படங்களில் நடித்துவந்த போதே அவரது நடிப்பிற்காக மலையாளத்தை தாண்டிய ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவர். அந்த வரவேற்பின் காரணமாக தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் நடித்து இன்னும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார்.
மாமன்னன் படத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டிய அவர், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மொழி தாண்டி ரசிகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். அடுத்ததாக அவர் வில்லனாக நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “புஷ்பா திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு குறித்து பாராட்டிய பலர், புஷ்பா 2 படம் குறித்து அதிகம் எதிர்பார்ப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பான் இந்திய நடிகராக நான் மாறிவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். பான் இந்திய நடிகராக மாறும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என தெரியவில்லை. புஷ்பா திரைப்படம் மூலம் என்னுடைய திரையுலக பயணத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அது இயக்குனர் சுகுமாரின் தலைமையிலான கூட்டணி உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நான் எப்போதும் போல என்னால் என்ன சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை மட்டுமே செய்து வருகிறேன். அது மட்டுமல்ல.. என்னுடைய திரையுலக வாழ்க்கை என்பது மலையாள சினிமாவில் தான் இருக்கிறது. மலையாளத்தில் நான் செய்த கதாபாத்திரங்களை போல இதுவரை வேறு எந்த மொழியிலும் நான் செய்தது இல்லை” என்று கூறியுள்ளார்.