இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள நடிகர் பஹத் பாசில் மலையாள படங்களில் நடித்துவந்த போதே அவரது நடிப்பிற்காக மலையாளத்தை தாண்டிய ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவர். அந்த வரவேற்பின் காரணமாக தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் நடித்து இன்னும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றார்.
மாமன்னன் படத்தில் வில்லத்தனம் காட்டி மிரட்டிய அவர், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ஆவேசம் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மொழி தாண்டி ரசிகர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். அடுத்ததாக அவர் வில்லனாக நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “புஷ்பா திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு குறித்து பாராட்டிய பலர், புஷ்பா 2 படம் குறித்து அதிகம் எதிர்பார்ப்பதாக கூறி வருகின்றனர். மேலும் பான் இந்திய நடிகராக நான் மாறிவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். பான் இந்திய நடிகராக மாறும் அளவிற்கு நான் என்ன செய்து விட்டேன் என தெரியவில்லை. புஷ்பா திரைப்படம் மூலம் என்னுடைய திரையுலக பயணத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அது இயக்குனர் சுகுமாரின் தலைமையிலான கூட்டணி உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நான் எப்போதும் போல என்னால் என்ன சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை மட்டுமே செய்து வருகிறேன். அது மட்டுமல்ல.. என்னுடைய திரையுலக வாழ்க்கை என்பது மலையாள சினிமாவில் தான் இருக்கிறது. மலையாளத்தில் நான் செய்த கதாபாத்திரங்களை போல இதுவரை வேறு எந்த மொழியிலும் நான் செய்தது இல்லை” என்று கூறியுள்ளார்.