திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சமீபகாலமாக சோசியல் மீடியாவின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் பல நடிகைகளும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் பல எதிர்மறை எண்ணம் கொண்ட நெட்டிசன்கள் இவர்களது பதிவை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பதிலுக்கு இவர்களுடன் எந்த ஒரு நடிகையும் சரிக்கு சரி பதில் கொடுத்து மோதலில் ஈடுபடுவது இல்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர் இது போன்ற டிரோல்களை நிறைய சந்தித்தார். ஆனால் அதை எதிர்கொள்வதற்காக, பதிலடி தருவதற்காக இவர் புத்திசாலித்தனமாக சில மாற்று வழிகளை கையாண்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.
அதாவது யாருக்கும் தெரியாமல் சில போலி கணக்குகளை சோசியல் மீடியாவில் உருவாக்கி அதன்மூலம் தன்னுடைய பதிவுகளில் முறையற்ற வகையில் விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு பெயரில் பதிலடி கொடுக்க துவங்கினாராம். ஆனால் இப்படி நான் செய்வது இதுவரை யாருக்குமே தெரியாது. ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டே போகட்டும் என அப்படியே விட்டுவிட முடியாது. அவர்கள் எல்லை மீறும்போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அமைரா தஸ்தூர்.